
சே
யாரங்கே...
என் கல்லறையின்மீது நின்றுகொண்டு,
எனக்காகக் கண்ணீர் வடிக்கும் அந்த
மெழுகுவர்த்திகளை
அணைத்துவிடுங்கள்..
அழுகை-
எனக்குப் பிடிக்காத ஒன்று..
-எர்னஸ்டோ சேகுவேராவின் நினைவுகளுக்கு அர்ப்பணம்
*************
கொட்டும் மழையில்
நனைந்துதான்
வருகிறாய்!!
ஆனால், துளிகூட
ஈரமில்லை உன்
மனதில்!
******
என்
கண்ணிருக்குத்தான்
எத்தனை
வெட்கம்!
நீ விலகிச்
சென்ற பிறகுதான்,
அது வெளியே
எட்டிப் பார்க்கிறது.
********
பேசினால் என்ன
என்று நான் கேட்க,
பேசினால் தானா
என்று நீ கேட்க,
கரைவது காசு
மட்டுமல்ல,
என் காதலும்தான்.
**********
என் வாழ்க்கையை விட்டு
விலகி செல்ல நான்
உன் பாதையல்ல
உன் பாதங்கள்!
*********
ஞாபக மறதி!
குரங்காட்டியின்
கோல் பிடித்து தாண்டும்
குறங்கிற்கு
நினைவில் இல்லை
தான் கடல் தாண்டிச்
சென்ற கதையும்
ஒரு நகரம் அழித்த கதையும்.
நன்றி : குமுதம் 10.03.2010
No comments:
Post a Comment