1. காலம் நன் கைகளில்
A.M.ராஜகோபாலன்,B.A
ஆஸ்தான வித்வான், Sriஅஹோபில மடம்
திருவரசு புத்தக நிலையம் (Rs100.00)
2. நீ நாளும் நினை நெஞ்சே
Thursday, March 25, 2010
Wednesday, March 24, 2010
ஆன்மிகம்

அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்றும் சேர்ந்ததுபிரணவ
மந்திரமான 'ஓம்'. இந்த பிரணவத்தின்
வடிவானவர் முருகப்பெருமான்.
முருகன் என்ற திருநாமத்தில் 'மு' எனும் எழுத்து
முகுந்தனையும்; 'ரு' ருத்திரனையும்; 'க' பிரம்மனையும்
குறிக்கும். ஆகவே முருகனை வணங்க மும்மூர்த்திகளையும்
வழிபட்ட பலன் கிடைக்கும்.
முருகனின் ஆருமுகங்கள் : ஆறு பருவ காலங்களையும்;
பன்னிரண்டு திருக்கரங்கள் பன்னிரண்டு மாதங்களையும்
குறிக்கின்றனவாம்.
முருகப்பெருமானின் மயில் பறவையை 'சுத்த மாயை'
என்றும், மயிலின் வாயிலுள்ள பாம்பை ' அசுத்த மாயை'
என்றும், மயிலின் கால்களில் உள்ள பாம்பை 'பிரக்ருதி
மாயை' என்றும் ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.
முருகனின் கரங்களில் திகழும் ஈட்டி, கோடாரி, கத்தி, வில்,
பாசம், அங்குசனம், கொடி, வஜ்ரம், பாணம், மணி, தாமரை
ஆகிய பதினொன்றும் ஏகதாச ருத்ரர்கள் என்று ஞானநூல்கள்
கூறுகின்றன.
நன்றி : சக்தி விகடன்
(கே என் மகாலிங்கம் பாண்டிச்சேரி)
Tuesday, March 16, 2010
நவரத்தினங்கள்
வைரம் Diamond
வைடூரியம் Cat's eye, Lapis lazuli
முத்து Pearl
மரகதம் Emerald
மாணிக்கம் Ruby
பவளம் Coral
புட்பராகம் Topaz
கோமேதகம் Hessonite
நீலம் Sapphire
வைடூரியம் Cat's eye, Lapis lazuli
முத்து Pearl
மரகதம் Emerald
மாணிக்கம் Ruby
பவளம் Coral
புட்பராகம் Topaz
கோமேதகம் Hessonite
நீலம் Sapphire
Wednesday, March 10, 2010
ஹோரை தோஷம்

கிரகங்கள் ஒன்பது. அதில் ராகு, கேது நீங்கலாக உள்ள 7
கிரகங்களுக்கு மட்டும் ஹோரை என்ற அமைப்பை ஏற்படுத்தி
உள்ளனர்.கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் அதனதன் சுற்று
வேகம், சுற்றுபாதை இவைகளுக்கு ஏற்றாற்போல் தங்குகிறதோ,
அதுபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகமும் இரண்டரை
நாழிகை, அதாவது 1 மணி நேரம் தங்கி வலம் வருகிறது.
அனைத்து பஞ்சாங்கங்களிலும் ஒவ்வொரு கிழமைக்கும் கால
ஹோரை நாழிகை விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அறிந்துக்
கொள்ள ஏதுவாக இந்த குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
காலையில் சூரிய உதயம் ஆரம்பம் ஆகும் பொழுது அன்றைய
தின கிழமையின் கிரகமே முதல் ஹோரை ஆரம்பமாகும். அதாவது
ஞாயிறு காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஹோரை
ஆரம்பம் ஆகும். திங்கள் அன்று சந்திர ஹோரையும், செவ்வாய்
அன்று செவ்வாய் ஹோரையும், புதன் அன்று புதன் ஹோரையும்,
வியாழன் அன்று குரு ஹோரையும், வெள்ளி அன்று சுக்கிர ஹோரையும்,
சனி அன்று சனி ஹோரையும் ஆரம்பமாகும். இந்த ஹோரைகளை அன்றைய
சூரிய உதயத்தில் இருந்துதான் கணக்கிட வேண்டும். ஒவ்வொரு
ஹோரையும் கொடுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் உள்ளன.
ஒவ்வொரு ஹோரையை வைத்து, அது சுப ஹோரையாக இருந்தால்,
சுபகாரியங்களை ஆரம்பிக்கலாம்.
சூரிய ஹோரை : உத்தியோகத்தில் சேர, அது தொடர்பான
பெரிய அதிகாரிகளை பார்ப்பது, பத்திரங்கள், உயில் எழுத, சிபாரிசுகள்
பெற சூரிய ஹோரையில் செய்யலாம். புது வீடு குடி போகக்கூடாது.
சந்திர ஹோரை : வியாபாபரத் தொழில் தொடங்க மற்றும்
முக்கியமான வியாபாரங்கள் செய்ய, யாத்திரை, வெளிநாடு செல்லும் யாத்திரை
தொடங்க, இந்த ஹோரை சுபமாகும். கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சந்திரனாக
இருந்தால் இவைகளை விலக்கலாம்.
செவ்வாய் ஹோரை : செவ்வாய் ஹோரையில் சுபகாரியங்களை
விலக்குவது நன்று. எந்த காரியத்தை செய்யும்போதும், நாம் பேசுகின்ற பேச்சுக்களே
நமக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும்.
புதன் ஹோரை : தொலைத் தொடர்பு கொள்ள தந்தி, போன்,
பேக்ஸ்,இன்டர்நெட் ஆகியவைகளை உபயோகப்படுத்த நல்ல நேரம். வழக்கு,
வியாஜ்ஜியம் தொடர்பாக வக்கில்களைப் பார்க்க நல்ல நேரம்.கதை, கட்டுரைகள்
எழுத,ஜாதகம் பார்ப்பது கூட இந்த நேரத்தில் பார்க்கலாம். புதிய கணக்கு தொடங்கலாம்.
நிலம் வாங்க, பெண் பார்த்தல் பேசக்கூடாது.
குரு ஹோரை : எடுத்த காரியங்கள் அனைத்தும் நன்மை பயக்கும்.
முகூர்த்த நேரம் அமையும் போது குரு ஹோரையில் அமைவது மிகவும் விஷேசம்.
ஆடை ஆபரணங்கள் வாங்க, திருமாங்கல்யத்துக்கு பொன் வாங்க ஏற்ற நேரம். நகை
கடை வியாபாரிகள் இந்த நேரங்களில் கடை தொடங்கவும், பெரிய வியாபாரங்கள் செய்யவும் ஏற்றதாகும். முதல் விருந்து கூடாது.
சுக்கிர ஹோரை : சுப காரியங்களுக்கு ஏற்ற நேரம். திருமணத்திற்க்கு
பெண் பார்க்க சாந்தி முகூர்த்தம் செய்ய ஏற்ற நேரம். சுக்கிர ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் யாவும் செய்யலாம். விருந்து கொடுக்கவும், கொடுத்த கடனை வசூல் செய்யவும் முயற்சிக்கலாம். புதிய வாகனங்கள் வாங்க ஏற்ற நேரம். கடன் மட்டும் கொடுக்கக் கூடாது.
சனி ஹோரை : சனி ஹோரையில் வியாதிஸ்தர்கள் புதிதாக மருந்து உண்ணக்கூடாது. அவசியம் ஏற்ப்பட்டால் ஒழிய, மருத்துவமனைக்கு செல்லக்கூடாது. இந்த ஹோரை அசுப ஹோரை என்றாலும், நிலங்கள், மனைகள் வாங்க, விற்க முயற்ச்சிக்கலாம். அதுபற்றி பேசலாம். பிரயாணம் கூடாது.
செவ்வாய் ஹோரை, சனி ஹோரை, கிருஷ்ணபட்ச சந்திர ஹோரை ஆகியவைகள் அசுப ஹோரைகள் என்றும், குரு, சுக்கிர, சூரிய வளர்ப்பிறை சந்திரன் ஹோரைகள் சிறப்பாகவும் அமைக்கப்படுள்ளது.
குரு முதலில், அடுத்ததாக சுக்கிரன், அதற்கடுத்து புதன், அதற்கடுத்து சூரிய ஹோரை, கடைசியாக வளர்ப்பிறை சந்திரன் என்றும் வரிசைப்படுத்தப்படுள்ளது.
நன்றி : ஆன்மீகம் 11'2009
Monday, March 8, 2010
ஆன்மீகம்
தேவர்கள் வணங்கிய லிங்கங்கள்
1. இந்திரன் பதுமராலிங்கம்
2. எமதர்மா கோமேதகலிங்கம்
3. விஷ்ணு இந்திர லிங்கம்
4. வாயுதேவன் பித்தளை லிங்கம்
5. சந்திரன் முத்து லிங்கம்
6. பிரம்மா சொர்ண லிங்கம்
7. வருணன் நீல லிங்கம்
8. நாகர் பவள லிங்கம்
9. அசுவினி மண் லிங்கம்
10. ருத்திரங்கள் திருவெண்ணீற்று லிங்கம்
11. மகாலட்சுமி நெய் லிங்கம்
12. சரஸ்வதி மாணிக்க லிங்கம்
பரிவார ஸ்தலங்கள்
திருவிடைமருதூர் மூல லிங்க ஸ்தலம். இந்த ஸ்தலத்தை சுற்றி
திரு வலஞ்சுழி (விநாயகர்), சுவாமிமலை (முருகன்),
திருவாப்பாடி சண்டேசர்),சூரியனார் கோவில்(சூரியன்),
சிதம்பரம் (நடராசர்), சீர்காழி (பைரவர்), திருவாவடுதுறை(நந்தி),
திருவாருர்(சோமஸ்கந்தர்), திருவாலங்குடி(தட்சிணாமூர்த்தி)
ஆகிய ஸ்தலங்கள் பரிவார ஸ்தலங்களாக உள்ளன.
1. இந்திரன் பதுமராலிங்கம்
2. எமதர்மா கோமேதகலிங்கம்
3. விஷ்ணு இந்திர லிங்கம்
4. வாயுதேவன் பித்தளை லிங்கம்
5. சந்திரன் முத்து லிங்கம்
6. பிரம்மா சொர்ண லிங்கம்
7. வருணன் நீல லிங்கம்
8. நாகர் பவள லிங்கம்
9. அசுவினி மண் லிங்கம்
10. ருத்திரங்கள் திருவெண்ணீற்று லிங்கம்
11. மகாலட்சுமி நெய் லிங்கம்
12. சரஸ்வதி மாணிக்க லிங்கம்
பரிவார ஸ்தலங்கள்
திருவிடைமருதூர் மூல லிங்க ஸ்தலம். இந்த ஸ்தலத்தை சுற்றி
திரு வலஞ்சுழி (விநாயகர்), சுவாமிமலை (முருகன்),
திருவாப்பாடி சண்டேசர்),சூரியனார் கோவில்(சூரியன்),
சிதம்பரம் (நடராசர்), சீர்காழி (பைரவர்), திருவாவடுதுறை(நந்தி),
திருவாருர்(சோமஸ்கந்தர்), திருவாலங்குடி(தட்சிணாமூர்த்தி)
ஆகிய ஸ்தலங்கள் பரிவார ஸ்தலங்களாக உள்ளன.
Monday, March 1, 2010
ப(பி)டித்த கவிதைகள்

சே
யாரங்கே...
என் கல்லறையின்மீது நின்றுகொண்டு,
எனக்காகக் கண்ணீர் வடிக்கும் அந்த
மெழுகுவர்த்திகளை
அணைத்துவிடுங்கள்..
அழுகை-
எனக்குப் பிடிக்காத ஒன்று..
-எர்னஸ்டோ சேகுவேராவின் நினைவுகளுக்கு அர்ப்பணம்
*************
கொட்டும் மழையில்
நனைந்துதான்
வருகிறாய்!!
ஆனால், துளிகூட
ஈரமில்லை உன்
மனதில்!
******
என்
கண்ணிருக்குத்தான்
எத்தனை
வெட்கம்!
நீ விலகிச்
சென்ற பிறகுதான்,
அது வெளியே
எட்டிப் பார்க்கிறது.
********
பேசினால் என்ன
என்று நான் கேட்க,
பேசினால் தானா
என்று நீ கேட்க,
கரைவது காசு
மட்டுமல்ல,
என் காதலும்தான்.
**********
என் வாழ்க்கையை விட்டு
விலகி செல்ல நான்
உன் பாதையல்ல
உன் பாதங்கள்!
*********
ஞாபக மறதி!
குரங்காட்டியின்
கோல் பிடித்து தாண்டும்
குறங்கிற்கு
நினைவில் இல்லை
தான் கடல் தாண்டிச்
சென்ற கதையும்
ஒரு நகரம் அழித்த கதையும்.
நன்றி : குமுதம் 10.03.2010
கையிலே இருக்கு... மருந்து

# வெள்ளைப்பூண்டை உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கு மலேரியா நோய் வராது.
# பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் தேவையற்று சேரும் கொழுப்பு
குறையும்.
# உடல் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் இருக்க, தினமும் காலையில் 4
வெள்ளைப்பூண்டுத் துண்டுகளை சாப்பிடுவது நல்லது.
# வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும்
பூண்டு சாறு கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.
# இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள்
உள்ளுக்குள் சாப்பிட கொடுக்க எளிதில் குணம் கிடைக்கும்.
# டான்ஸில் என்கிற உள்நாக்கு வளர்ந்திருப்பவர்கள், அந்த வளர்ந்த உள்நாக்கு சதை
வளர்ச்சியின் மீது பூண்டுசாறினை தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
# பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட உடல் கொழுப்பு குறையும். ரத்தக்கொதிப்பு,
மனஅழுத்தம் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.
# பூண்டில் பலவித சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம்தான். எனவே
பூண்டை அதிகமாக சமையலில் பயன்படுத்துவதன் மூலமாக நாம் நமது எலும்பிற்கு
வருகின்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
நன்றி : மாலை மலர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜலதோசம் நீங்க ...
வெங்காய வைத்தியம்
ஜலதோசத்தால் பாதிக்கபட்டவர்கள் சாம்பார் வெங்காயம் ஒன்று
அல்லது இரண்டினை இரவு படுக்கைக்குச் செல்லும் முன் நன்கு
மென்று தின்றுவிட்டு சுடுநீர் பருகிவிட்டு படுக்கைக்கு சென்றால்
காலையில் ஜலதோசம் பறந்துவிடும்.
நீரகாரம் சாப்பிடுபவர்கள் சாம்பார் வெங்காயத்தை பச்சையாகக்
கடித்து சாதத்தோடு உண்பதை பார்த்திருப்பீர்கள்.
சாலட்டில் பெரிய வெங்காயத்தை, காரட் துண்டுகளுடன் வட்டமாக
நறுக்கி வைத்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். இதிலிருந்து ஜலதோசத்தை
தடுக்கும் சக்தி வெங்காயத்திற்க்கு இருப்பது புரிகிறதல்லவா!!
ஒரு டம்ளர் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து இரவில் படுக்கைக்கு
செல்லும் முன்பு மிதமான சூட்டில் அருந்தினால், காலையில் ஜலதோசம்
பறந்து போகும்.
ஜலதோசம் உள்ளவர்கள் காபியில் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து பருகலாம்.
கசகசாவை அரைத்து பாலில் கலந்து கொடுத்தால் ஜலதோசம் விலகும்ம்
மஞ்சளை சுட்டு அதிலிருந்து வரும் புகையை முகர்ந்தாலும் ஜலதோசம் குறையும்.
நன்றி : யோகக்கலை (11.2009)
Subscribe to:
Posts (Atom)