Sunday, October 12, 2014

ஓடி ஓடி உழைக்கிறோம்

. ஓய்வில்லாமல் உழைக்கிறோம். சில சமயங்களில் உட்கார்ந்த்து சாப்பிட நேரம் இல்லை. உறவுகளிடம் பேச நேரம் இல்லை. எந்த விஷேசங்களிலும் கலந்துக்கொள்ளமுடியாமல் வீட்டில் என்ன நடக்கிறது தெரியாது பிள்ளைகளின் படிப்பு எப்படி தெரியாது.!! அவர்கள் சரியாக பள்ளிக்கு செல்கிறார்களா அது........அதை எல்லாம் அவங்க அம்மா பார்த்துக்குவாங்க அட நம்ம பிள்ளைகள் அவங்க சரியாகத்தான் இருப்பார்கள். இப்படி சிலசமயம் பதில்கள். ஆனால், ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கும் பணம் எங்கே போகிறது என்றே தெரியாமல் ஏன் உழைக்கிறோம்.எங்களுக்கு பெரிய சம்பளம் இல்லைங்க. அப்போ பெரிய சம்பளக்காரங்க ரொம்ப பணம் வச்சிருப்பங்களோ. எவ்வளவு உழைக்கிறோம் என்பது பெரிதல்ல‌ அதை எப்படி செலவு செய்கிறோம்? அதில் ஏதாவது சேமிப்பு வைக்கிறோமா? அதுதான் முக்கியம் . என்னங்க நீங்க சொல்லுறிங்க??? என் சம்பளம் வீட்டு செலவுக்கே சரியா இருக்கும். அப்புறம் எங்கே சேமிப்பு? சேமிப்பு என்றால் என்ன? என் அகராதியில் செலவு செய்ய துவங்கும் முன்னே ஒரு தொகை. அது நூறு ஆயிரம் என்று இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.ஐந்து வெள்ளி, இல்லை பத்து வெள்ளி முடியும். இது எல்லோராலும் முடியும். நீங்கள் ஐநூறு வெள்ளி சம்பளக்காரரா? மாதம் ஐம்பது வெள்ளி ஒதுக்குங்கள். செலவு பட்டியல் தயாரிக்க பழகுங்கள். செலவு பட்டியல் அதாங்க பட்ஜட். ஒரு கொடு போட்ட புத்தகம் வைத்துகொள்ளுங்கள். முதல் பக்கத்தில் பிள்ளையார் சுழி போடுங்கள் . இப்பொது செலவு பட்டியல் எழுத ஆரம்பிக்கலாம். முதலாவதாக சேமிப்புத்தான் எழுத வேண்டும். பிறகுதான் செலவு. மாத சேமிப்பு. 10, வீட்டுக்கு வங்கியில் செலுத்த 000/=, தண்ணீர்00/=, மின்சாரம்/=, ASTRO/=, பிள்ளைகளின் தினசரி சிற்றுண்டி பணம்/=, பள்ளி பேருந்து00/=, டியூஷன் 00/=, மருத்துவ செலவு 000/= உங்கள் மாத‌ செலவு எப்படி என்பதை வைத்து உங்கள் பட்டியல் தயாரிக்கவேண்டும். எங்கு துண்டு விழுந்தாலும் சேமிப்புக்கு என்று ஒதுக்கிய பணத்தில் கை வைக்காதீர்கள். என்ன சிரிக்கிரிங்க. பின்ன என்னங்க சேமிப்பு 10 வெள்ளி ஒதுக்கினேன்..... அதுல கை வைக்க கூடதுனா எப்படி??? அந்த பத்து வெள்ளியையும் கை வச்ச நம்ம எப்போ சேமிப்பை ஆரம்பிக்கிறது. உங்க மாத சம்பளம் செலவு அதன் அடிப்படையில்தான் இந்த பட்டியல். சேமிப்புத் தொகையை நீங்க முடிவு பண்ண‌லாம். நீங்க ஒரு ஆள் சம்பாத்தியம் என்றால் நீங்களும் மனைவியும் ஆலோசிக்கலாம். இருவரும் சம்பாதிப்பவர்களாக இருந்தால், சேமிப்பு தொகையை சற்றுக் கூட்டலாம். முடிந்தவரை பிள்ளைகளுக்கு முன் இந்த பட்டியல் ஆரம்பியுங்கள். பெற்றோர்களின் பணச் சுமை தெரியும். சிறுக சிறுக சேமித்தால்தான் பணம் பார்க்க முடியும். அசந்து உட்காரதீர்கள். காரியத்தில் இறங்கும் தருணம் இது. திட்டத்தை செயல் படுத்தும் நேரம். என்னங்க நீங்க‌ இது தீபாவளி மாதம். இந்த மாதத்தில் எப்படினு நீங்க கேட்பிங்க. ஆனால், எந்த மாதம் நமக்கு செலவு இல்லை. அப்படியே எதாவது ஒரு செலவு இந்த மாதத்தோடு முடியும் என்றால்... இன்னொரு செலவை அது அனுப்பிசிட்டுத்தான் போகும். எப்படினு கேட்டா??? இந்த மாதத்தோடு வங்கியில் காருக்கு செலுத்தும் கடன் முடிந்தது என்றால், வேறு ஒரு ரூபத்தில் புது செலவு வரும் இல்லை என்றால் நாமாகவே புதுசா எதையாவது இழுத்து வைப்போம். இது நிதர்சனமான உண்மை. அப்படி ஏதும் வராமல் இருந்தால் அந்த பணம் அடுத்தடுத்து வரும் மாதங்களில் எங்கே போகிறது என்றே தெரியாது. அதற்காக‌த்தான் இந்த செலவு பட்டியல். ஆனால், இந்த மாதிரி செலவு அதிகமா இருக்குற மாததில்தான் செலவு பட்டியல் துவங்கனும். அப்போ நம்ம திறமை என்னனு நமக்கு தெரியனும். அட இந்த தீபவளி மாதத்தில் நம்மளும் ஐமபது வெள்ளியை சேமிப்புக்கு எடுத்து வச்சிட்டோமே!!!. உங்களுக்கு நீங்களே தட்டிக் கொடுத்துக்கொள்வீர்கள். இப்போ இந்த சேமிப்பை எடுத்து வைக்க சொன்னேன் அல்லவா? அந்த கதைக்கு வருவோம். அதை தனியா எடுத்து எடுக்க முடியாத ஒரு உண்டியல் இந்த கோழி, யானை உண்டியல். அதுல போட்டு வைங்க. நினைத்ததும் எடுக்க முடியாது. உங்களுக்கு ஒரு கணக்கு இருக்கும் எந்த மாதத்தில் இந்த திட்டத்தை ஆரம்பித்தோம் என்று. உங்கள் சேமிப்பு தொகையும் எத்தனை மாதம் என்று கணக்கு இருக்கும் பட்சத்தில் நூறு... இருநூறு வெள்ளி என்று சேர்ந்திருக்கும்போது ஒரு வங்கி கணக்கு துவங்குங்கள். ஆனால் இந்த வங்கி கணக்கு புத்தகம் போதும் அட்டை வேண்டாம் . கவனம். அட்டை இருந்தால் கொஞ்சம் பணம் சேரும்போதே எதற்கோ செலவும் செய்ய சொல்லி மனசு அடிச்சுக்கும். மாத சம்பளம் தவிர உங்களுக்கு வரும் பிரிம், கூட்டு இந்த பணங்களிலும் கொஞ்சம் இதில் சேர்க்கலாம். நமக்கு, நம் குடும்பத்துக்கு அவசர தேவை இருக்கும்போது கையை பிசைந்த்துக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர் கையை எதிர்ப்பார்க்க வேண்டாம். மருத்துவ செலவு சொல்லிக்கொண்டு வருவதில்லை. இந்த சேமிப்பில் இருந்து எடுத்து உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால், எதற்காக சேமிப்பில் இருந்து பணம் எடுத்தாலும் அடுத்தடுத்து வரும் மாதங்களில் உங்கள் சேமிப்பு தொகையை கூட்டிக் கொள்ள வேண்டும். எடுத்த பணத்தை மீண்டும் யாரிடமோ கடன் வாங்கியதாகவே நினைத்துக்கொண்டு செலுத்திவிடவேண்டும். ஒரு முறைதான் செலவு வருமா என்ன? அடுத்த முறை வரும் செலவுக்கு செம்மிப்பில் இருந்து எடுக்கலாம் என்று பார்த்தால் குறைந்திருக்குமே? முயற்ச்சித்து பாருங்கள். உடனே பணம் சேர்ந்துவிடாது. சிறு சிறுக சேமிக்க பழகிக்கொண்டால், நமக்கும் சேமிக்கும் பழக்கம் சுமையாக தெரியாது. சுகமாகத்தான் இருக்கும். முடிவு பண்ணுங்கள் இந்த தீபாவளிக்கு நான் ஒரு புதிய சேமிப்பை துவங்குகிறேன் என்று உங்களுக்கு நீங்களே சொல்லுங்கள் . சொன்னதை போலவே செயலில் இறங்குங்கள் . உங்கள் புதிய முயற்ச்சிக்கு எங்களின் வாழ்த்துக்கள்.

Thursday, September 12, 2013

100 வார்த்தைகள் ஒரு பொருள் ( கடவுள் )

இதோ அந்த வார்த்தைகள் 1. ஆண்டவன் God, as ruler of heaven and earth. Lord: கடவுள். 2. இறைவன் God, the all-abiding. 3 தெய்வம் God, deity; கடவுள். 4. கடவுள் God, who transcends speech and mind; இறைவன். 5. இறையவன் God; கடவுள். 6. தேவன் King; அரசன். 7. அசலன் One who is motionless; அசைவிலாதவன். 8. அமுதர் God, as immortal; கடவுள். 9. ஏகன் God, as one. 10. ஆதிபகவன் God, the first cause; கடவுள். 11. ஏமன் God of Death. 12. அற்புதன் God, as a marvellous, wonderful being; கடவுள். 13. அருட்சோதி God, the embodiment of effulgent grace; கடவுள். 14. காமன் The Buddhistic god of evil. 15. கூற்று Yama, the god of death; யமன். 16. சிவஞானம் Knowledge of God; பதியுணர்வு. 17. சிவம் Highest state of God in which He exists as Pure Intelligence. 18. சுயம்பு Self-existent being, anything considered to be uncreated. 19. செம்பொருள் God; முதற்பொருளான கடவுள். 20. செம்மல் Great person, as king; பெருமையிற் சிறந்தோன். 21. தத்துவன் God, as the ultimate Reality. 22. அந்திரன் God; தேவன். 23. அம்மான் ammān God, as father; கடவுள். ஆழி. 24. அண்ணல் God, deity; கடவுள். 25. அணுக்கன் One who is near; சமீபஸ்தன். 26. அச்சயன் God, as the imperishable One; அழிவில்லாத கடவுள். 27. அக்கரன் God, as the indestructible One; கடவுள். 28. அரூபி God, without form; கடவுள். 29. நாசன் Destroyer; அழிப்பவன். 30. கூற்றன் Yama, the god of death; யமன். 31. குயவன் God, the Invisible; மறைபொருளானவன். 32. காமதேவன் Indian Cupid, the god of love; மன்மதன். 33. கரும்பன் God of love who has a sugar-cane bow. 34. கருணாமூர்த்தி God as Grace personified; அருளுருவானவன். 35. ஒருமை orumai : Knowledge of God. 36. கடற்கோ the god or lord of the sea; வருணன். 37. அறவன் Sage, ascetic. 38. அறவாணன் God, the abode of virtue, or whose abode is virtue; கடவுள். 39. அக்கி God of fire; அக்கினிதேவன். அக்கியுங் கரமிழந்து. 40. அகண்டன் God, as the Undivided One; கடவுள். 41. அனகன் God, as the sinless one. 42. அனந்தன் God, as the endless One; கடவுள். 43. அனாதி God, who has no beginning; கடவுள். 44. எரி Agni, god of fire. 45. ஆக்கியோன் God as the maker, creator; படைத்தோன். 46. அட்சயன் God, as exempt from decay; கடவுள். 47. அண்டன் God, as Lord of the universe; கடவுள். 48. அகண்டிதன் God, as an undivided whole; பின்னப்படாத கடவுள். 49. அகாரணன் God, as uncaused; கடவுள். 50 காமக்கடவுள் The particular manifestation of god which one chooses to worship, the god of one's choice; வழிபடுதெய்வம். 51. ஐயோன் God, lit., a being of subtle essence; நுண்ணியன். 52 அதிகாரம் atikāram :Aspect of God in which action is predominant, one of three avattai. 53. அதிகுணன் God, as transcending all attributes; கடவுள். 54. அதிவாதம் Preliminary consecratory ceremony for invoking the presence of God in an image. 55. அருட்குடையோன் God, one whose umbrella is grace itself; கடவுள். 56. அவினாசி God, the indestructible; கடவுள். 57. அனாமயன் One not subject to disease, as God. 58. அனிலன் the god of wind; வாயுதேவன். 59. ஆத்திகன் One who believes in the existence of God. 60. ஆரியன் foreigner 61. இயமன் the god of death. 62. ஈறிலான் God, He who has no end; கடவுள். 63. உதாசனன் Agni, the god of fire. 64 .எண்குணம் The eight attributes of God. 65. கத்தன் God Agent, doer, maker, author; செய்பவன். 66. கந்தர்ப்பன் Appellation for Maṉmataṉ, the god of love; மன்மதன். 67. கந்தவகன் God of wind, who wafts odours; வாயுதேவன். 68. கராளி One of the seven tongues of God Agni; அக்கினிபகவான். 69. கருணாகரன் God as the storehouse of grace; கருணைக்கு இருப்பிடமான கடவுள். 70. கருணாலயன் God, the storehouse of grace; அருளுக்கு நிலைக்கள மானவன். 71. கருப்புவில் Sugar-cane bow of the God of love; மன்மத னது கரும்பு வில். 72. கருப்பொருள் God, the efficient Cause, the originator of all things. 73. காமதகனன் Šiva, as one who burnt Kāma, god of love; சிவன். 74. காரணவன் One who is the First Cause, God; மூலகாரணனான கடவுள். 75. கிருத்தியம் Five- fold functions of God. See பஞ்சகிருத்தியம். 76. கிருபாகரன் The fountain of mercy or grace, as God. 77. கிருபாசனம் God, as the seat of mercy and grace. 78 சகதீசன் God, as Lord of the Universe. 79. சகந்நாதன் God, as Lord of the Universe; [உலகிற்கு இறைவன்] கடவுள். 80. சகலாத்தன் God worshipped by the Nirgrantha sect of Jainas. 81. சச்சையன் God, as Reality; உண்மைப்பொருளானவன். 82. சந்தோகன் God, as One who can be realised only through Vēdas. 83. சரமோபாயம் Absolute surrender to God, as the final means of salvation; 84. சித்துரு God, as the embodiment of intelligence; [அறிவு வடி வானவன்] கடவுள். 85. சிற்குணம் Attribute of intelligence, either of God or individual souls; ஞானமாகிய குணம். 86. சிற்குணன் God, as Pure Intelligence; கடவுள். 87. சின்மயன் Individual soul or God, as pure intelligence; ஞானரூபியான ஆன்மா. 88. சுயஞ்சோதி God, as self-luminous. 89. சுருதியான் God, as revealed by the Vēdas. 90. சேடன் God; கடவுள். செங்குன்றூர் நின்ற சேடனதாள். 91. சேர்த்தி . Occasion when the god and goddess of a temple are seated together. 92. சோதியன் God, as radiant; [ஒளிவடிவமானவன்] கடவுள். 93. ஞானவாரி God, as the Ocean of Wisdom; [ஞானக்கடல்] கடவுள். 94. தபனன் Agni, the God of Fire; அக்கினிதேவன். 95. தயாபரன் God, as All-Merciful; [தயைமிக்கவன்] கடவுள். 96. தருமன் God of Justice and Righteousness; அறக்கடவுள். 97. தனபதி God of wealth; குபேரன். 98. துரியன் Soul in the highest state; சுத்தான்மா. 99. தேபூசை Worship, reverent homage paid to god. 100. நமதன் Lord, God; ஆண்டவன்.

Monday, January 24, 2011

பழந்தமிழரின் அளவை முறைகள்

ஒரு ஆழக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்
ஒரு உழக்கு = முந்நுற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்
ஒரு கலம் = அறுபத்தி நாலரை லிட்டர்
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்
ஒரு நெய் கரண்டி = தேக்கரண்டி அளவு
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்
ஒரு குப்பி = எழுநூறு மில்லி லிட்டர்
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்
இரண்டு ஆழக்கு = ஒரு உழக்கு
இரண்டு உழக்கு = ஒரு உரி
இரண்டு உரி = ஒரு நாழி
எட்டு நாழி = ஒரு குறுணி
இரண்டு குறுணி = ஒரு பதக்கு
இரண்டு பதக்கு = ஒரு தூணி
மூன்று தூணி = ஒரு கலம்

Tuesday, August 17, 2010

சமையல்

வெண்டைக்காய் தோசை

வழக்கமாக இட்லி, தோசைக்கு மாவு அரைப்பதுபோல் அரைக்க வேண்டும். அதில் உளுந்தைக் குறைத்துக் கொண்டு தேவையான அளவு வெண்டைக்காயை சிறு துன்டுகளாக நறுக்கி சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் அந்த மாவில் பதமான தோசைகளாக வார்க்க வேண்டும். முறுகலான தோசை செய்தால் வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்.

இந்த வெண்டைக்காய் தோசைக்கு தொட்டு கொள்ள வல்லாரை கீரையுடன் தேங்காய், கடலை சேர்த்து வல்லாரை சட்னி செய்து கொண்டால் ஒரு முழுமையான நினைவாற்றல் உணவு தயார்.

படிக்கும் மாண‌வர்களுக்கு இதனை பக்குவமாகவும் சுவையாகவும் செய்து சாப்பிடத் தரவேண்டும். வெண்டைக்காய், வல்லாரை இந்த இரண்டும் நினைவாற்றலை வளர்க்க உடவும் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் நீக்கி மாவுப்பொருள் உடலில் தேங்கதவாறு வெளியேற்றிவிடும். இதனால், மாணவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்

கேள்வி பதில்கள்

நான் படித்த சில கேல்வி பதில்கள் உங்கள் பார்வைக்கு

யோகியின் பதில்கள்

கேள்வி : காய்ச்சல் இருக்கும்போது நாக்கு கசப்பாக இருப்பது ஏன்?

பதில் : காய்ச்சல் என்பதே நமது உடலிலுள்ள கழிவுப் பொருள்கள் வெளியேறும்போது
ஏற்படும் ஒரு நோய் ஆகும். எனவே கண், காது, மூக்கு, நாக்கு என்று ஐம்புலன்கள்
வழியாக நச்சுப் பொருள்கள் வெளியேறும்போது நாக்கில் கசப்பு உணர்ச்சி தோன்றுகிறது.
அதுமட்டுமல்ல, நாக்கில் அமைந்துள்ள சுவை உணர்வு நரம்புகள்,
ஓய்வெடுத்துக்கொள்வதால் காய்ச்சலின்போது உணவு உண்ணக்கூடாது என்பதையும் நமது
உடல் சூசகமாக உணர்த்துகின்றது.

Monday, August 16, 2010

மனித உடல் உறுப்பு கடிகாரம்

அக்குபஞ்சர் சித்தாந்தபடி மனித உடலில் உள்ள முக்கியமான
12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய
உயிர் சக்தி ஓட்டத்தின் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். ஒரு
மனிதனின் உடல்நிலை நன்றாகவோ அல்லது நோய்வாய்படுவதோ
இந்த உயிர் சக்தி ஓட்டத்தின் தன்மையை பொறுத்ததேயாகும்.

அதிகாலை 3-5மணி ~‍ நுரையீரல்:

இந்நேரத்தில் எழுவது உடல் நலத்திற்கு மிகவும் நன்று.யோகாசனம்,
மூச்சுபயிற்சி, தியானம் போன்றவைகளை இந்நேரத்தில் செய்வது
மிகவும் நல்லது. காரணம் விடியற்காலை 3.30 மணியிலிருந்து 5 மணி
வரை வெட்ட வெளியில் அமுதகாற்று(ஓசோன்) ஒன்று வீசுகின்றது.
அந்த நேரத்தில் எழுந்து தியானம் செய்வதால் நாம் ஒரு புதிய
சக்தியைப் பெறுவோம். ஆஸ்துமா நோயாளிகளால் இந்த நேரத்தில்
தூங்க முடியாது. மூச்சுவிட இயலாது. சிரமப்படுவர்.

காலை 5-7மணி ‍~ பெருங்குடல் :

இந்நேரத்தில் கண்டிப்பாக எழுந்திருக்க வேண்டும். இந்நேரத்தில்
எழுந்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்காது. மலம் கழித்து
குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அதனால் நரம்புதளர்ச்சி ஏற்படாது.

காலை 7-9மணி ~‍ வயிறு :

கண்டிப்பாக இந்நேரத்தில் காலை உணவை முடித்திருக்க வேண்டும்.

காலை 9-11மணி ‍ ~ மண்ணீரல் :

மிகச்சிறிய சிற்றுண்டியோ, பானங்களோ அல்லது தண்ணீர்கூட
இந்நேரத்தில் சாப்பிடக்கூடாது. அப்படி ஏதாவது சாப்பிட்டால்
மண்ணீரலில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்.
மேலும் நாம் அந்நேரத்தில் உண்ணும் உணவு, நீர் ஆகியவை
வயிற்றில் ஜீரணிக்க நெடுநேரம் எடுத்துக்கொள்கிறது. உணவின்
ஜீரணத்தில் மண்ணீரலின் பங்கு பற்றிநமக்கு தெரிந்ததே. உணவு
சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப்பிற்கும், புத்துணர்விற்கும்
பதிலாக அசதியும், தூக்கமும் இந்நேரத்தில் அவர்களை ஆட்கொள்ளும்.
நாளடைவில் பசி குறையும். நீரிழிவு நோயளிகளுக்கு தொந்திரவு அதிகரிக்கும்
நேரமிது. (படபட‌ப்பு, மயக்கம், தூக்க கலக்கம் ஏற்படும்).

நண்பகல் 11-1மணி ~ இருதயம் :

கடினமாக வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடித்து உடலை சாந்தப்படுத்திக் கொள்ளலாம். நகரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் விழிப்புடன் இருக்கும் நேரமிது. காரணம் இந்த நேரத்தில்தான் இருதய நோயளிகளுக்கும், சக்கரை நோயளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியகூறுகள் அதிகம் இருக்கும். அத‌னால் அதை தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் படுத்து தூங்காமல் இருக்க வேண்டும். அப்படி தூங்கினால் அபான வாயு பிராண வாயுடன் கலந்து மாரடைப்பை ஏற்படுத்தும் அல்லது முகவாதம் அல்லது பக்கவாதம் அல்லது மூட்டுவாதம் மற்றும் உடல் வலிகள் நிச்சயம் தோன்றும்.

பகல் 1-3மணி ~‍ சிறுகுடல் :

மதிய உணவை முடித்து 3௫-5 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 3-5மணி ~‍ சிறுநீர்ப்பை

பானங்களோ அல்லது தண்ணீரோ அருந்த உகந்த நேரம். முதுகுவலி, இடுப்புவலி வரும் நேரம்.


மாலை 5-7ம‌ணி ~ ‍ சிறுநீர‌க‌ம் :

வ‌ழ‌க்க‌மான‌ வேலையிலிருந்து விடுப‌ட்டு இர‌வுக்கு முன்பாக‌வே வீடு வ‌ந்து சேர‌வேண்டும். ரீன‌ல் பெயிலிய‌ர் முத‌ல் நீர்க்க‌டுப்பு வ‌ரை ஏற்ப‌டும்.

இர‌வு 7-9ம‌ணி ~‍ இத‌ய‌ மேலுறை :

இந்நேர‌த்தில் க‌ண்டிப்பாக‌ இர‌வு உண‌வை முடித்திருக்க‌ வேன்டும். மார்பு வ‌லி, பார‌ம், ப‌ட‌ப‌ப்பு தோன்றும்.

இர‌வு 9-11ம‌ணி ~‍‍‍ முன்று வெப்ப‌மூட்டி :

காலை முத‌ல் மாலை வ‌ரை உழைத்து க‌ளைத்த‌ ம‌னித‌ உறுப்புக‌ளுக்கு ஓய்வு த‌ர‌ வேண்டிய‌ நேர‌ம். இந்நேர‌த்திற்கு பின் க‌ண் விழித்திருத்த‌லோ, ப‌டிப்ப‌தோ கூடாது.


ந‌டுநிசி 11-1 ம‌ணி ~‍ பித்த‌ப்பை :

இந்நேர‌த்திற்குள் க‌ண்டிப்பாக‌ தூங்கிக் கொண்டிருக்க‌ வேண்டும். இந்நேர‌த்தில் விழித்திருந்தால், அடுத்த நாள் உங்க‌ள் முழு ச‌க்தியை இழ‌க்க‌ நேரிடும்.

மிக‌ அதிகாலை 1-3மணி ~ க‌ல்லீர‌ல் :

இந்நேர‌த்தில் ஆழ்ந்த‌ நித்திரையில் இருக்க‌ வேண்டும். இந்நேர‌த்தில் விழித்திருந்தால் க‌ண்டிப்பாக‌ க‌ண்ணின் பார்வை ச‌க்தி குறையும். உற‌க்க‌ம் பாதிக்கும் உட‌ல் அரிப்பு, ந‌மைச்ச‌ல் அதிக‌ரிக்கும்.

மேற்க்க‌ண்ட‌ நேர‌ங்க‌ளில் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்களை கொண்ட‌வ‌ர்க‌ள் யோகாச‌ன‌ ப‌யிற்சிக‌ளை முறையாக‌ க‌ற்று ப‌ழ‌கி வ‌ந்தால் நோய்க‌ள் ஏற்ப‌டாம‌ல் குறைவ‌ற்ற‌ செல்வ‌த்தை பெறுவ‌ர்! ஏனெனில், நோய‌ற்ற‌ வாழ்வுதானே குறைவ‌ற்ற‌ செல்வ‌ம்!

ந‌ன்றி : யோக‌க்க‌லை ‍ ஆக‌ஸ்ட்'10
Dr. ஏ.எஸ் அசோக்குமார்-Ph.d., (Y.Sc)

Tuesday, August 3, 2010

துன்பத்திலும் இன்பம்

மகிழ்ச்சியை நோக்கியே உலகம் இயங்குகிறது. 'மகிழ்ச்சி கிடைக்காது' எனில், ஒரு செயலைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. வழியெல்லாம் வலி இருந்தாலும், முடிவில் இன்பம் இருக்கும் எனில் அந்தச் செயலைச் செய்யலாம் எனும் அடிப்படைத் தத்துவ‌த்தில்தான்,சாக‌ச‌ம் புரியவும் சாதனை படைக்கவும் மானுடம் தொடர்ந்து முயற்ச்சி மேற்க்கொள்கிறது. அப்போது நேருகிற மரணத்தைக்கூட இன்பம் என்றெண்ணி மகிழ்கிற‌து.

மகிழ்ச்சியை களவாடுகிற உணர்ச்சி, கோபம். துக்கத்தில்கூட சிறிதேனும் மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால், கோபத்தில் துளியும் மகிழ்ச்சி இருப்பது இல்லை.வயதானவர்களாக இருந்தாலும், அவர்களது மரணம் துக்கத்தை ஏற்ப்படுத்தும். ஆனாலும் ' நல்ல சாவு' என மனம் கொஞ்ச‌ம் மகிழ்ச்சியுறும்.; கோபம் அப்படிப்பட்டதல்ல!

துக்கம் -‍ விரிசல்; கோபம் -‍ பிளவு. துக்கம் ‍- வெள்ளம்; கோபம் -‍ ஆழிப்பேரலை. கோபம் வருகிறபோதும், அதைப் பாதுகாக்கிற‌போதும், அதற்குப் பிறகு வெகுநேரம் அதையே எண்ணி, உடலின் ஒவ்வொரு அவயமும் படபடக்கும்;

இதயம் வேக‌மாக இயங்கும்; மூச்சு வாங்கும்; முகம் சிவக்கும்; நாக்கு வறளும்; நெஞ்ச‌‌ம் பதைபதைக்கும்; மலைமேல் ஏறும் மிதிவண்டிபோல நுரையீரல் திணறும். கோபம் மற‌‌‌ந்தாலும், அது ஏற்ப‌டுத்திய தடயங்கள் மட்டும் அப்படியே தங்கிவிடும்.

மேலாண்மை வகுப்புக்களில், 'கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?" என இன்றைக்கும் ஏகப்பட்ட வழிமுறைகளைச் சொல்லிதருகின்றனர். ஏனெனில், அதிகாரிகளின் கோபத்தால், அலுவலக இயக்கமே பாதிக்கப்பட்டுவிடும்.

சொந்த வாழ்வில் இயலாமைமற்றும் வெளியுலகில் எதிர்ப்பார்த்தது நிகழாதது ஆகியவற்றால் கோப‌ம் ஏற்படுகிற‌து. அந்த‌ ஆற்றாமையான‌து, புல‌ன்க‌ளின் வ‌ழியே வார்த்தைக‌ளாக‌ வ‌ழிந்தோடுகிற‌து. சின்ன‌தொரு ச‌ம்ப‌வ‌த்துக்கே ஒடிந்துவிடுப‌வ‌ர்க‌ள் உண்டு.

க‌ண‌வ‌ன் ம‌னைவி ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌தைச் சொல்ல‌மாட்டார்க‌ள். என்றேனும் ஒருநாள், அவ‌ர்க‌ளின் புரித‌ல் பிச‌கானால், அவ‌ர்க‌ளின் கோப‌ம் பூத‌க‌ர‌மாக‌க் கிள‌ம்பி , பூக‌ம்ப‌ங்க‌ளை ஏற்ப்ப‌டுத்தும். 'இத்த‌னை நாள் எவ்வ‌ல‌வு அன்புட‌மன் ந‌ட‌ந்துக்கொண்டார்' என‌ப் ப‌ழைய‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ஒரு நிமிட‌ம் நிநைத்துப் பார்த்தால், அந்த‌ பிற‌ழ்வைப் பெரிதுப‌டுத்தாம‌ல் சென்றுவிட‌லாம்.

உற‌வோ, ந‌ட்போ.... ஒருவ‌ர் ந‌ம்மைக் காய‌ப்ப‌டுத்தும்போது, அவ‌ர்க‌ள் அன்புட‌ன் ந‌ட‌ந்துக்கொண்ட‌ நிக‌ழ்வுக‌ளை நினைத்தால், ந‌ம‌து கோப‌மும் அத‌னால் ஏற்ப்ப‌டும் உளைச்ச‌லும் ச‌ம‌ன் செய்ய‌ப‌ட்டுவிடும். நாம் துன்ப‌த்தில் இருந்த‌போது அவ‌ர்க‌ளின் தோளில் சாய்ந்துகொண்ட‌ நினைவுக‌ளை எண்ணிப்பார்த்தால், அவ‌ர்க‌ள் மீது வ‌ன்ம‌ம் ஏற்ப‌ட‌ வாய்ப்புக‌ளே இருக்காது. நெருக்க‌டி நேர‌ங்க‌ளில் ந‌ம் அருகுல் இருந்து ஆறுத‌ல் சொன்ன‌ அவ‌ர்க‌ளை ஒரு க‌ண‌ம் நினைத்தால், ம‌ன‌தில் ம‌டிப்பு விழாது. முள் குத்திய‌த‌ற்காக‌க் காலை வெட்டி எறிவ‌துபோல் ந‌ட‌ந்துகொள்ளும் ந‌ம‌து செய‌ல்க‌ள்ந‌ம‌க்கு புல‌ப்ப‌ட‌ துவ‌ங்கும்.

ந‌ண்ப‌ர்க‌ளுக்குள் சின்ன‌ சின்ன‌ வ‌ருத்த‌ங்க‌ள் வ‌ருவ‌து இய‌ல்புதான். வ‌ருத்த‌மே வ‌ராத உற‌வுக‌ள் வ‌லுவான‌வை அல்ல‌ என்ப‌தே உண்மை. மேம்போக்கான‌ உற‌வுக‌ளில், எப்போதும் புன்ன‌கைதான். ஆழ‌மான‌ ப‌கிர்த‌லில் அவ்வ‌ப்போது மூச்சுத் திண‌றுவ‌தும் உண்டு. அவ‌ர்க‌ளை சமாதான‌ப் ப‌டுத்துவ‌து ந‌ம‌து க‌ட‌மை. ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் சின்ன‌ கார‌ண‌த்துக்காக‌ப் பிரிகிற‌போது, உல‌க‌ உள்ளுண‌ர்விலேயே ஒரு சுருக்க‌ம் நிக‌ழ்கிற‌து.

என‌க்கும் ந‌ண்ப‌ர் ஒருவருக்கும் , க‌ல்லுரியில் ப‌டிக்கும்போது சின்ன‌ ம‌ன‌த்தாங்க‌ல். எங்க‌ள‌து மூத்த‌ மாண‌வ‌ர் ஒருவ‌ருக்கு இந்த‌ விஷ‌ய‌ம் தெரிந்த‌து./ எப்போதும் ஒன்றாக‌வே... தும்முவ‌தைக்கூட‌ தாள‌க‌தியில் செய்கிற‌ எங்க‌ளின் பிண‌க்கு அவ‌ருக்கு வ‌ருத்தை த‌ர‌ , ஒருநாள் என்னை அழைத்த‌வ‌ர் , "உன் ந‌ண்ப‌ர் உன்ன‌ப்ப‌ற்றிப் பெருமையாக‌ச் சொன்னார். உன்னிட‌ம் பேச‌ அவ‌ருக்கு ஆசை" என்றார். ம‌றுநாள் அவ‌ர‌து அறைக்கு, எங்க‌ள் இருவ‌ரையும் தேநீர் அருந்த‌ அழைத்தார். அத‌ன்பிற‌கு எங்க‌ளின் ந‌ட்பு மீண்டும் ம‌ல‌ர்ந்த‌து. இன்றுவ‌ரை, எங்க‌ளின் தொட‌ர்பு ஜீவ‌ந‌தியாக‌ ஒடிக்கொண்டு இருக்கிற‌து.

கேள்விபட்ட சம்பவம் ஒன்று :
புதிதாக திருமணமான தம்பதியிடம், மணப்பெண்ணின் தாய் பரிசுப்பொருள் ஒன்றைத்
தந்தாள். பிரித்துத் பார்த்தால், அது அவர்கள் இருவரின் பெயரிலுமான வங்கிக் கணக்கு.
தாய் சொன்னாள் : "நீங்கள் இருவரும் எப்போதெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறீர்களோ, உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்துவது போலான சம்பவம் எப்போதெல்லம் நடக்கிறதோ, அந்த வேளையில், உங்களின் வங்கி கணக்கில் ஒருவர் பணம் போடவேண்டும். அதற்கான காரணத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை தவறாமல் செய்யுங்கள். சேமிக்க இது ஒரு சிறந்த வழி!"

இரண்டு வருடங்கள் இனிதே கழிந்தது தாம்பத்தியம். எப்போதும் மகிழ்ச்சி, கும்மாளம், கொண்டட்டம் எனப் போய்க்கொண்டு இருந்த மண வாழ்க்கையில், திடீரென இரண்டு பேருக்கிடையிலும் முளைத்தது கருத்து வேற்றுமை. ' இனி சேர்ந்து வாழ முடியாது' என அறிவிப்பில் மட்டும் ஒற்றுமையை கடைப்பிடித்தனர். நீதிமன்றம் செல்லவும் துணிந்தனர். 'பரஸ்பர ஒப்புதல்' மூலம் விரைவில் மண முறிவு பெறலாம் என எண்ணினர்.

அந்த பெண், தாயரிடம் சென்று சேதி சொன்னாள். "இனி சேர்ந்து வாழ முடியாது என முடிவெடுத்தால், பிரிய வேண்டியதுதான். ஆனல் அதற்குமுன், உங்களது பங்கினை சரியாக பிரித்துக்கொள்ளுங்கள். உங்களது இணைந்த வங்கி கணக்கில் உள்ள பணத்தில் நீ போட்ட பணத்தை நீயும், உன் கணவர் போட்ட பணத்தை அவரும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றாள் தாயார்.

அதன்படி பீரோவுக்குள் வைத்திருந்த வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துப் பார்த்தனர். மனைவிக்கு மேல்படிப்பில் வெற்றி கிடைத்ததும் அவளின் பெயரில் 20,000 ரூபாய் போட்டிருந்தான் கணவன். மனைவிக்கு நல்ல வேலை கிடைத்ததும் 10,000 ரூபாய் போட்டிருந்தான். அதேபோல், கணவனுக்கு பதவி உயர்வு கிடைத்த தருணத்தில் அவன் பெயரில் 10,000 ரூபாய் போட்டிருந்தாள் மனைவி. இப்படியான பதிவுகள் மூலம் மொத்தம் 2 லட்சம் ரூபாய் கணக்கில் இருந்தது.

ஒவ்வொரு பதிவும் அவர்கள் கொண்டாடிய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. அப்போது இருவரும் நெருக்கமாக, அன்பாக, உயிருக்கு உயிராக உணர்ந்த நொடிகள் நிழலாடின. அவற்ரை நினைக்க கண்ணீர் சுரந்தது. துணையை சிநேகத்துடன் உணரமுடிந்தது. பிரியப் போகிறோமே எனும் உண்மை உறுத்தியது.
இவ்வளவு நெருக்கத்தையும் எப்படி நம்மால் தூக்கி எறியவும், மரக்கவும் முடிந்தது' என வருந்தினார்கள். இருந்தாலும் தன்முனைப்பு....'பனத்தை வங்கியிலிருந்து எடுத்து வருகிறேன்' என கிளம்பி சென்றவன், ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தான். வங்கி கணக்குப் புத்தகத்தைப் பிரித்து மனைவியிடம் தந்தான். அதில் அன்றைய தேதியில், 'இருவரும் மருபடி இணைந்ததற்காக' என்று எழுதி, 50,000 ரூபாய் செலுத்தப் பட்டிருந்தது.

தன்முனைப்பை சற்று தள்ளி வைத்ததும், தேவையற்ற‌ கோபத்தை ஒதுக்கி வைத்தும் வாழத் தெரிந்தால் மகிழ்ச்சி பொங்கும்; வருகின்ற கவலைகள் முகாமிடாமல் உடனே ஓடும்.

'நமது மகிழ்ச்சியை பலரிடமும் பகிர்ந்து கொள்ளலாம்; துக்கத்தை பகிர்ந்துக் கொள்ளக்கூடாது' எனும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று உண்டு. நண்பர்கள், நாம் பகிர்ந்து கொள்ளாமலேயே நமது துக்கத்தை உணர்வார்கள். அப்படி உணராதவர்கள் நண்பர்களே அல்லர். அவர்களிடம் பகிர்ந்துகொள்ளாததால் எந்த பதிப்பும் இல்லை.

அடுத்தவரின் மகிழ்ச்சியை குலைப்பதற்காகவே வாழ்ப்பவர்களும் உண்டு. அப்படிபட்டவர்கள், நம்மைப் பற்றி எவரேனும் அவதூறாகப் பேசினால், உடனே நம்மை தொலைப்பேசியில் தொடர்ப்பு கொண்டு சேதியை கக்குவார்கள். நல்லவிதமாக பேசியிருந்தாலோ, தெரிவிக்கவே மாட்டர்கள். நம்மிடம் நெருங்குவதற்காக, தீயவற்றை மட்டும் வடிகட்டி வழங்கி, நமக்கு நெருக்கமானவர்களாக நடித்து ஏமாற்றுவார். அவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே, 'ஏதோ கெட்ட சேதி ' எனத் தெரிந்துகொள்ளலாம். அவர்களின் எண்னை அலைப் பேசியில் பார்த்தாலே, நமக்கு நடுக்கம் வந்துவிடும்.

துன்பம் வரும்போது பக்குவத்துடன் எதிர் கொள்பவர், கோபப்படுவதில்லை. துன்பத்தைத் தனது சாமர்த்தியத்தால் கிள்ளி எறிந்துவிட்டு முன்னேறுவார். துன்பத்தை நாம் கொடுக்கும் முக்கியத்துவமே, அதை பெரிதாக்குகிறது!


எழுத்து : வெ. இறைய‌ன்பு

நன்றி : சக்தி விகடன் 25.07.10